Wednesday, October 21, 2015

யாரடா நான்?

யாரடா நான்?
நீ என்பது நானா? அல்லது
நான் என்பது நானா ?
அவனென்பது நானா? அல்லது
இவனென்பது நானா?
எவநென்பதும் நானா? அல்லது
எவனோ ஒருவன் தான் நானா?
அண்டமும் நான் ஆதி பகவனும் நான்!!!

நீ உடுத்தி இருக்கும் ஆடை நான்
மானம் காக்க வருபவன் அல்ல
உன் மானமே நான்!!!
நீ வணங்கும் கடவுள் நான்
நான் வகுத்த மதமும் நான்
மதம் பிரித்த பிரிவும் நான்
பிரிவு கொடுத்த வெறியும் நான்
உனக்குள்ளும் நான்
உன் எதிரிக்குள்ளும் நான்
நானென்பது நீயா???
முட்டாள் மானிட பதரே!!!
அண்டமும் நான் ஆதி பகவனும் நான்!!!

நல்லவன் நான்
கெட்டவன் நான்
உன்னுள் நல்லவன், அவனுள் கெட்டவனா?
முட்டாள் மானிட பதரே!!!
அண்டமும் நான் ஆதி பகவனும் நான்!!!

உன்னுள் உள்ள நல்லவனை பார்க்கிறாய் 
ஏனோ அவனுள் கெட்டவனையே தேடுகிறாய்???
அவனுள் நல்லவனை பார்த்தவர்கள் சகாப்தம் ஆனார்கள் 
மற்றவர்களோ  வாழ்ந்தார்கள் மாண்டார்கள்